ஆசிரியர்களின் பணியிட மாற்ற நடவடிக்கையை கைவிடுக - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர்களின் பணியிட மாற்ற நடவடிக்கையை கைவிடுக

ஆசிரியர்கள் மீதான பணியிட மாற்ற நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.




 இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கை இன்னும் ரத்து செய்யப்படவில்லை. 



 அவர்கள் மீதான மற்ற நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், பணியிட மாற்றம் இன்னும் ரத்து செய்யப்படாததால் ஆசிரியர்களும், அவர்களின் குடும்பங்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.




 பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை இணையர் வேறு இடத்தில் பணி செய்வதாலும், குழந்தைகள் வேறு இடங்களில் படிப்பதாலும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வாழும் நிலை உள்ளது. கோரிக்கைகள் நியாயமானவை. நிதிப் பற்றாக்குறையால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 



 எனவே, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவு பெறவுள்ள நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment