யூனியன் வங்கியில் பாதுகாப்புப் பணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

யூனியன் வங்கியில் பாதுகாப்புப் பணி

சென்னையில் உள்ள யூனியன் வங்கியில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அழைப்பு விடுத்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சென்னையில் உள்ள யூனியன் வங்கியில் பாதுகாப்புப் பணிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இரு பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டுவருகிறது . விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 18-ஆம் தேதி கடைசி நாள். கல்வித் தகுதியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயம் தெரிய வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு 17.03.2019-இலும், உடற்தகுதித் தேர்வு 16.04.2019-இலும் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு w‌w‌w.‌u‌n‌i‌o‌n​b​a‌n‌k‌o‌f‌i‌n‌d‌i​a.​c‌o‌m என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment