அடல் பென்ஷன் திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியம் 10,000ஆக உயர்கிறது: மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: அடல் பென்ஷன் திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியத்தை 10,000 ஆக உயர்த்தவும், திட்டத்தில் சேரும் வயதை 50 வரை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேல் 40 வயது வரை சேரலாம். அமைப்பு சாரா துறை சார்ந்தவர்களுக்கு இந்த திட்டத்தில் அரசு தனது சார்பில் ஒரு தொகையை செலுத்தும். வங்கி கணக்கு மூலமாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, இதில் சேர வங்கிக்கணக்கு முக்கியம். செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப, 60 வயதில் இருந்து குறைந்த பட்சம் 1,000 முதல் 5,000 வரை பென்ஷன் கிடைக்கும். 5,000 பென்ஷன் பெற 18 வயதில் சேர்ந்தால் மாதம் 210, 40 வயதில் சேர்ந்தால் 1,454 செலுத்த வேண்டி வரும். திட்டத்தில் சேரும்போது உள்ள வயதுக்கு ஏற்ப, தொகை மாறுபடும்.
முதன் முதலில் இந்த திட்டத்தில் எந்த தேதியில் சேர்கிறோமோ, ஏறக்குறைய அதே தேதியில்தான் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். 60 வயதுக்கு மேல் பென்ஷன் கிடைக்கும். திட்டத்தில் சேர்ந்தவர் இறந்து விட்டால், அவர் நியமித்த முதல் வாரிசுதாரருக்கு அதே பென்ஷன் தொகை கிடைக்கும். அவரும் இறந்து விட்டால், 2வது வாரிசுதாரருக்கு மொத்த தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 10,000 ஆக உயர்த்தவும், சேரும் வயதை 50 வரை உயர்த்தவும், வரி பலன்களை தற்போது உள்ள 50,000ல் இருந்து 1 லட்சமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், நிதியமைச்சகம் இதனை பரிசீலித்து வருகிறது.
Maximum pension to be increased to Rs 10,000 The Atal Pension Scheme was launched in 2015.
You can join up to 40 years of age over 18 years. The government will pay a sum of money on behalf of the NGO sector on its behalf. The scheme is implemented through a bank account. Therefore, it is important for the bank account to join. Pensions range from the age of 60 to at least 1,000 to 5,000, depending on the amount paid.
5,000 for pension at the age of 18 years, 210 for 40 months and 1,454 for pension. The amount varies according to age at enrollment. First, the date of joining the scheme will be taken from the bank account on approximately the same date. Pensioners over 60 years of age. In the event of death of the enrolled member, the first pensioner appointed will receive the same pension.
If he too dies, the 2nd heir will be paid the lump sum. The central government plans to increase the minimum pension to 10,000, increase the enrollment age to 50 and increase the tax benefits from the existing 50,000 to 1 lakh. The Ministry of Finance is considering this in response to requests made in this regard.

No comments:
Post a Comment
Please Comment