பழமொழிகள் அறிவோம் - ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் - உண்மையான விளக்கம்
தவறான பழமொழி:
"ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்"
சரியான பழமொழி:
"ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும் "
விளக்கம்: அம்மை நோய்கள் அதிக வெப்பத்தின் காரணமாய் ஏற்படுகின்றன. ஆடி மாதத்தில் அதிகபடியான குளிர்காற்று வீசுவதால் அம்மை நோய் பறந்து விடும் என்பது உண்மை. இதனையே ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் எனக்கூறினர்.
இப் பழமொழி நாளடைவில் மருவி ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என திரித்து கூறப்படுகிறது. ஏனென்றால் அவ்வளவு வேகமாய் காற்றடிக்கும். அதுபோல் ‘ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைபெய்யும்’. அதாவது ஆடி மாதத்திலேயே பருவக்காற்று அதிகபடியாக வீசும்போது ஐப்பசி மாதம் நல்ல மழை பெய்யும் என்பது. இது பெரும்பாலும் உண்மையாக நிகழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment