மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க ஏற்பாடு
பதேர்தல்களில் மாற்றுத் திறனாளிகள் அதிக அளவில் ஓட்டளிக்க தேவையான வசதிகளை செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது.இதன் படி, மாற்றுத் திறனாளிகளை முன்னதாகவே ஓட்டளிக்க செய்வது, வீட்டில் இருந்தே ஓட்டளிக்கும் வசதி, தபால் ஓட்டு, மொபைல் ஓட்டுச்சாவடி அமைத்தல் உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் மாண்புகளின்படி, யாருக்கு ஓட்டளித்தனர் என்ற ரகசியம் காக்கும் வகையிலும் எளிமையான முறையில் தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் நடந்த தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி மொபைல் ஆப் மூலமும் மாற்றுத் திறனாளிகள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
Please Comment