ஆஹா சூப்பர் .,பார்ப்பவர்களை வியக்கவைக்கும் அரசு பள்ளியின் அசத்தல் சாதனை .,தொடர்ந்து வரும் மாற்றம் .!
சேரனூர் அரசு பள்ளி ஆசிரியர் வீணான தண்ணீர் கேனை பயன்படுத்தி பள்ளியில் கழிப்பறை கட்டி புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் .
செஞ்சியிலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் சேரனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கே அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் மாற வேண்டும் என்று எண்ணிய அப்பள்ளியின் ஆசிரியர் மாணவர்களுக்கு பல பயிற்சியை கொடுத்து மாற்றங்களை உருவாக்கினார் .
மேலும் அங்கு மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி, கணினி பழக்குவதுபோன்ற பயிற்சிகள் இங்கே சொல்லிகொடுக்கப்படுகிறது.
ஆனால் மாணவர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை இல்லை .எனவே அதற்கு தீர்வு காண எண்ணிய அப்பள்ளியின் ஆசிரியர் முருகேசன் தனது தீவிர முயற்சியால் மாணவர்களுக்கு வழிகாட்டி வீணாகும் தண்ணீர் கேன்களை வைத்து கழிப்பறையை உருவாக்கியுள்ளார் .
இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு தொடர்ந்து இந்த அரசு பள்ளியில் நிகழ்ந்துவரும் மாற்றத்தால் அதிக மாணவர்கள் சேரத் தொடங்கி யுள்ளனர்

No comments:
Post a Comment
Please Comment