விம்பிள்டன்: தாயாக முதல் கிராண்ட் ஸ்லாம் வெல்ல இறுதிப் போட்டிக்கு நுழைந்தார் செரினா! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விம்பிள்டன்: தாயாக முதல் கிராண்ட் ஸ்லாம் வெல்ல இறுதிப் போட்டிக்கு நுழைந்தார் செரினா!


லண்டன்: கெர்பர் உடன் இறுதிப் போட்டியை செரினா வில்லியம்ஸ் உறுதி செய்தார். 





விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள மிக மூத்தப் போட்டியாளர்களின் வரிசையில் மூன்றாவது இடத்தை செரினா வில்லியம்ஸ் பிடித்துள்ளார். அதாவது 36 ஆண்டுகள் 291 நாட்களில் களமிறங்குகிறார். இவர் ஜெர்மன் நாட்டின் உலகதர வரிசையில் 10வது இடம்பிடித்த கெர்பரை சந்திக்கிறார். இதேபோன்று கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்டத்தில் வில்லியம்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 






இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஜூலியா கார்ஜஸ் உடன் செரினா வில்லியம்ஸ் மோதினார். அதில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செரினா வெற்றி பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம் ஒலிம்பியா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த பின், செரினா பங்கேற்கும் 4வது தொடர் விம்பிள்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 






ஏற்கனவே 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரினா, தாயாக முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல ஆவலுடன் காத்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், இது மிகவும் உணர்ச்சிகரமானது. இதற்கு எப்படி கொண்டாட வேண்டும் என்று கூட தெரியவில்லை.



4வது தொடரில் இப்படியொரு சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது பிரசவம் ஏராளமான அறுவை சிகிச்சைகளுடன் மிகவும் சிரமமாக இருந்ததாக கூறினார். 

No comments:

Post a Comment

Please Comment