எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவி கீர்த்தனா!
நடந்து முடிந்த நீட் தேர்வுகளில் தமிழக அளவில் முதல் மாணவியாக இடம்பிடித்த கீர்த்தனாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மே மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் முடிவுகள், கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 676 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 12வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்தார். மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதிலும், தமிழகத்தில் அவர் முதலிடத்தில் இருந்தார். நேற்று முதல், மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு துவங்கிய நிலையில், மாணவி கீர்த்தனா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment