எம்.பி.ஏ., படிப்பு துவக்கம்
அண்ணாமலை பல்கலையில், எம்.பி.ஏ., செயலாக்க தொழில் நிர்வாக மேலாண்மை பகுதி நேர படிப்பு துவங்கப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலை மற்றும் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் இணைந்து, எம்.பி.ஏ., செயலாக்க தொழில் நிர்வாக மேலாண்மை பகுதி நேர படிப்பை துவங்கியுள்ளது
இதில் சேர விருப்பம் உள்ளவர்கள், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 500 ரூபாய், மற்றவர்களுக்கு, 1,000 ரூபாய். ஆன் லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு சான்றுகள், இளநிலை பட்டப் படிப்பு சான்று.மாற்றுச் சான்று, ஜாதிச் சான்று போன்றவற்றை இணைத்து, பதிவாளர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் என்ற முகவரிக்கு வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
இத்தகவலை துணைவேந்தர் முருகேசன் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
Please Comment