எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறிய பள்ளி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறிய பள்ளி

பைரோசாபாத்: உ.பி.,யில் மாணவர்களிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர்கள் படிக்கும் பள்ளிக்கு ரயில் போல வண்ணம் தீட்டி, சுவச்தா எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டி உள்ளனர்.


உ.பி., மாநிலம் பைரோசாபாத் மாவட்டத்தில், அரசு பள்ளி உள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரைt உள்ள இப்பள்ளியில், 170 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வகுப்பறைகளுக்கு ரயில் பெட்டி போல வண்ணம் தீட்டியுள்ளனர். 


இது அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அம்மாவட்டத்தில், திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். பைரோசாபாத் மாவட்ட கலெக்டர் நேகா சர்மா கூறுகையில்t, மாணவர்கள் மத்தியில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த , அதற்கு சுவச்தா எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Please Comment