அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பிளாஸ்டிக் தடை திட்டம், செப்., 15 முதல், பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.அனைத்து மாவட்ட பள்ளி கல்வி அலுவலகங்கள், அரசு, அரசு உதவி, சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., என, அனைத்து பள்ளிகளும், இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்வதுடன், அனைத்து பள்ளிகளிலும், &'பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடில்லாத பள்ளி&' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
Please Comment