தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் இது குறித்து தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் இணையம் மூலம் இணைக்கப்படும் என்றார். 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால் அரசு பள்ளிகள் மேலும் வளர்ச்சியடையும் என்று தெரிகிறது.மாணவர்களுக்கு தரமான கற்றலை வழங்குவது அரசின் தலையாய கடமையாகும்.


No comments:
Post a Comment
Please Comment