Govt school - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Govt school

"அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆசிரியர்கள் களமிறங்க வேண்டும்'



தருமபுரி மாவட்டத்தில் பின்தங்கியுள்ள, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஆசிரியர்களும், செயற்பாட்டாளர்களும் களமிறங்க வேண்டும் என பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் செயலர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:



மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளைக் கண்டறிய வேண்டும். அந்தப் பகுதிகளில் உள்ள சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர்களையும் ஒருங்கிணைத்து வலுவான மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். அரசுப் பள்ளிகள் தரமானவை என்ற நம்பிக்கை மக்களுக்கு உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment