தமிழக முழுவதும் குரூப் 2 தேர்வு நிறைவு.! 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக முழுவதும் குரூப் 2 தேர்வு நிறைவு.! 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்..!

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2,268 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கியது.குரூப் 2 முதல் நிலை தேர்வானது காலியாக உள்ள 1,119 நேர்முக பதவிகளுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய தேர்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது.





தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் மற்றும் வருவாய்த் துறை உதவியாளர் , தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளது.அந்த பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 எழுத்து தேர்வு தமிழக முழுவதும் இன்று நடைபெற்றது.இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்த தேர்வானது நடந்து முடிந்துள்ளது.இந்த தேர்வின் முடிவுகள் குறித்து விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment