2019 நீட்: தேர்வு நேரம் மாற்றம் குறித்து தேசிய தேர்வு நிறுவனம் முக்கிய அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2019 நீட்: தேர்வு நேரம் மாற்றம் குறித்து தேசிய தேர்வு நிறுவனம் முக்கிய அறிவிப்பு

டுத்த ஆண்டு (2019) நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், தேர்வு நேரம் மற்றும் தேர்வு கட்டுப்பாடுகள் குறித்து தேசிய தேர்வு நிறுவனம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.






நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக மத்திய அரசு நீட் எனப்படும் தேசிய தேர்வை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வுகளை இதுவரை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வந்த நிலையில், இந்த கல்வி ஆண்டு முதல் தேசிய தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு நடத்தும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தற்போது தேசிய தேர்வு நிறுவனம் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.





அடுத்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர விரும்புபவர்கள், அதற்கான நீட் தேர்வை எழுத வேண்டிய நிலையில், தேர்வு ஆன்லைன் விண்ணப்பதிவு நேற்று தொடங்கி உள்ளது. வருகின்ற 30ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்றும், இதற்கான தேர்வுக் கட்டணத்தை டிசம்பர் 1ம் தேதி இரவு11.30மணி வரை செலுத்தலாம். 2019ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.



இந்த நிலையில் தேர்வு நேரம் மற்றும் தேர்வு கட்டுப்பாடுகள் குறித்து தேசிய தேர்வு நிறுவனம் அறிவித்து உள்ளது.



அதன்படி 2019ம் ஆண்டு நீட் தேர்வு,பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை என மாற்றப்பட்டு உள்ளது. இதுவரை காலை நேரத்திலேயே நடைபெற்று வந்த தேர்வு முதன்முறையாக பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.


ஆன்லைன் விண்ணப்பப் பதிவின் போது பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும். இதற்கு 'ஆதார்' எண் கட்டாயம் இல்லை. பட்டியலிடப்பட்ட, ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம். ஆதார் எண் பதிவதாக இருந்தால், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே பதிய வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திடும்போது, விரல் ரேகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு மையத்துக்குள், தடைச் செய்யப்பட்டப் பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுவோர் மற்றும் காப்பி அடித்துப் பிடிபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், மத்திய அரசு நடத்தும் தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் 2 முடித்தவர்கள், நீட் தேர்வு எழுதத் தகுதி இல்லை. பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம்.


குறைந்த பட்ச வயது 17 எனவும், அதிக பட்ச வயது 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின் படி, அனைத்து மாநிலப் பாடத்திட்டங்களை இணைத்து, பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்படும்.
பாடத்திட்ட விபரங்கள் மற்றும் ஆன்லைன் பதிவு விபரங்களை, ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment