கல்வித்துறைக்கு தனி ஸ்டுடியோ: செங்கோட்டையன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வித்துறைக்கு தனி ஸ்டுடியோ: செங்கோட்டையன்

''பள்ளிக்கல்வித் துறைக்கு தனியாக, ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கி, மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.








அவரது பேட்டி:நடுநிலைப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வயது குழந்தைகளுக்கு, கல்வி கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையம் தேர்வு செய்யப்படும். கூடுதலாக உள்ள ஆசிரியர்களை கொண்டு, குழந்தைகளுக்கு சிறந்த ஆங்கில கல்வி கற்றுத்தரப்படும்.பள்ளிக்கல்வித் துறைக்கு தனியாக, ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சிறந்த கல்வியாளர்களை கொண்டு, மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படும். அது சேனல் அல்ல. அரசு கேபிள் மூலம், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும், மக்களுக்கு கொண்டு செல்ல, முதல்வரின் ஒப்புதல் பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில், ஆயுதபூஜை சேர்க்கையாக, அங்கன்வாடி மையங்களுக்கு, 8,700 குழந்தைகள் வந்துஉள்ளனர். அரசு துவக்கப் பள்ளிகளில், 9,219 பேர் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment