பள்ளிகளில் விடுதலை நாள் விழா கொண்டாட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகளில் விடுதலை நாள் விழா கொண்டாட்டம்


காரைக்கால் மாவட்ட பள்ளிகளில், புதுச்சேரி அரசின் 64ம் ஆண்டு விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.புதுச்சேரி அரசு சார்பில், காரைக்கால் கடற்கரை சாலையில் 64ம் ஆண்டு விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது. 






அதேபோல், காரைக்கால் தருமபுரம் எஸ்.அர்.வி.எஸ் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளி முதல்வர் கந்தசாமி தேசியக்கொடியை ஏற்றி அனைவரையும் வரவேற்றார். துணை முதல்வர் சுமதி, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் விழா குறித்து உரையாற்றினர். தொடர்ந்து, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புதுச்சேரி அரசின் விடுதலை நாள் விழா குறித்து, தமிழ், ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் உரையாற்றினர். முன்னதாக, பள்ளி வளாகத்தில், முதல்வர் கந்தசாமி தலைமையில் தீபாவளிவிழா பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் திரட்டிய தீபாவளி நிதியில், சப்தஸ்வரம் முதியோர் இல்லத்திற்கு, பீரோ மற்றும் இனிப்புகளும், ஜிப்ஜி ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு மாத கால மளிகை பொருட்களும், போர்வை இனிப்புகளும் வழங்கப்பட்டது. அதேபோல், காரைக்கால் வேட்டைக்காரன் வீதியில் இயங்கும் பிரைட் அகடமி பள்ளியில் விடுதலை நாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளி முதல்வர் மோகனாவித்யாவதி தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.






மாணவர்கள் புதுச்சேரி அரசின் விடுதலை நாள் விழா குறித்து, தமிழ், ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் உரையாற்றினர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கும், பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்களின் விடுதலை நாள் விழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Please Comment