மாநில அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும்மாணவர்களுக்கு, சி.இ.ஓ., வாழ்த்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாநில அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும்மாணவர்களுக்கு, சி.இ.ஓ., வாழ்த்து

கோவையில் நடைபெறவுள்ள மாநில அறிவியல் மாநாட்டில் பங்கேற்கவுள்ள விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளை சி.இ.ஓ., வாழ்த்தினார்.






தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். இதில், முன்னதாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளை தேர்வு செய்து, மாநில அளவிலான அறிவியல் மாநாட்டிற்கு அனுப்புவது வழக்கம்.






கோவையில் இன்று (9ம் தேதி), 10, 11 ஆகிய தேதிகளில் மாநில அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, அறிவியல் இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை சாரதா, டி.பரங்கினி, நல்லாவூர், காங்கேயனுார், பு.கொணலவாடி ஆகிய அரசு பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிகளில் தலா 2 மாணவர்கள் என 10 மாணவ, மாணவிகளை தேர்வு செய்துள்ளனர்.கோவை மாநில அறிவியல் மாநாட்டில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு சி.இ.ஓ., முனுசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த மாணவர்களோடு, ஒருங்கிணைப்பாளர்கள் சிவமுருகன், இளங்கோவன், பாலமுருகன் ஆகியோர் மாநாட்டிற்கு செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment