தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இருதினங்களுக்கு முன்பு கூறுகையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் போன்று, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார்.
இந்த நிலையில் நேற்று சென்னை முகப்பேர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, தானியங்கி வருகைப்பதிவு, குறுஞ்செய்தி அனுப்புதல் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 12ஆம் வகுப்பு முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். பிப்ரவரி 10ம் தேதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் படிப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மாணவர்களை தங்கள் குழந்தைகளாக கருதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment