அங்கன்வாடிகளில் 'ஏ.பி.சி., நீ வாசி...!' 122 உபரி ஆசிரியர்களுக்கு பொறுப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அங்கன்வாடிகளில் 'ஏ.பி.சி., நீ வாசி...!' 122 உபரி ஆசிரியர்களுக்கு பொறுப்பு

அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்பு துவங்கவுள்ளதால், கற்பித்தல் பணிகளுக்கு, உபரியாக உள்ள, 122 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.









தமிழகத்தில், 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில், முன் மழலையர் வகுப்புகள் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி வளாகத்துக்குள் செயல்படும், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் வயதை அடிப்படையாக கொண்டு, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள், இம்மாதம் துவங்கப்படுகின்றன. பொங்கல் விடுமுறைக்குப் பின், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.இத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, இயக்குனர் ராமேஸ்வர முருகன், வீடியோ கான்பிரன்ஸ் மூலம், முதன்மை கல்வி அதிகாரிகளுடன் நேற்று, ஆலோசனை நடத்தினார்.கோவை மாவட்டத்தில், 122 அங்கன்வாடி மையங்களில், முன்மழலையர் வகுப்புகள் துவங்கப்படவுள்ளன. 








இங்கு, கற்பித்தல் பணிகளில் ஈடுபட, உபரியாக உள்ள, 122 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படவுள்ளனர். குழந்தைகளின் வயதுக்கேற்ப, கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்கள் குறித்து, சிலபஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகை யில்,''கோவையில், 122 அங்கன்வாடிகளில் முன்மழலையர் வகுப்புகள் துவங்க, போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ''முதல்வர் இத்திட்டத்தை துவக்கியவுடன், 122 ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் கையாளப்படும்,'' என்றார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment