குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு சிறப்பு இலவச பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு சிறப்பு இலவச பயிற்சி


துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர் பணிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு மார்ச் 3-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 







 துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர் பணிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு மார்ச் 3-ம் தேதி நடைபெறும். இத்தேர்வுக்கு பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் போட்டித்தேர்வு பயிற்சி மையம் சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஜனவரி 13-ம் தொடங்குகின்றன. தினமும் வகுப்பும், சனிக்கிழமைதோறும் மாதிரித் தேர்வும் நடைபெறும். இதுதொடர்பாக இலவச அறிமுக வகுப்பு வரும்13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அமைந்துள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது. 







இதில் கலந்துகொள்ள விரும்புவோர் அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள் நேரடியாக வந்து பதிவுசெய்து கொள்ளலாம். மேலும், 8668038347 என்ற செல்போன் எண்ணில் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இந்தத் தகவலை செங்கல்வராய நாயக்கர் சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Please Comment