இனி 8 ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு அறிக்கை.!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இனி 8 ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு அறிக்கை.!!

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை மாநில மொழி, ஆங்கிலத்துடன், ஹிந்தியையும் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, கே.கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையானது,






 இந்திய முழுவதும் 8 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வர, கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை நியமித்தது. இந்த குழு தனது ஆய்வு பணியை நடத்தி வந்த நிலையில், மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் இங்தக ஆய்வுக்கான முழு அறிக்கையை சமர்பித்து உள்ளது. இந்நிலையில், இந்த ஆய்வு அறிக்கையில், ''நாடுமுழுவதும் உள்ள அணைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் எனவும், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை தொடக்க நிலையில் இருந்தே கற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 







மேலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை கட்டாயமாக கற்கபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment