குரூப்-1 தேர்வர்களுக்கு முழு நேர பயிற்சி முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-1 தேர்வர்களுக்கு முழு நேர பயிற்சி முகாம்

திருப்பூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடக்க உள்ள, குரூப்-1 தேர்வுக்கான, இலவச முழு நேர பயிற்சி துவங்கியுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 137 பணியிடங்களுக்கான, &'குரூப்-1&' முதல்நிலை தேர்வு, மார்ச் 3ல் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம், தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சியும், மாதிரி தேர்வும் நடத்தப்படுகிறது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, குரூப்-1 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கான பயிற்சி துவங்கியுள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தினமும் காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை பயிற்சி நடக்கிறது.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதிகாவிடம் கேட்டபோது, &'&'குரூப்-1 தேர்வுக்கு, குறுகிய நாட்களே இருப்பதால், முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வர்களுக்கு, இம்மாத இறுதி வரை பயிற்சி அளிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள, அதிகாரிகள், தங்களது தேர்வு அனுபவங்களுடன், சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்,&'&' என்றார்.

No comments:

Post a Comment

Please Comment