பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் 1ம்தேதி முதல் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை; கல்வித்துறை அதிகாரிகள் தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் 1ம்தேதி முதல் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை; கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*




பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் வரும் 1ம்தேதி முதல் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 1ம்தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து பிளஸ்1, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஆயத்த பணிகளில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 





தேர்வு விதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவு வழங்கியுள்ளனர். அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், பொது தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment