வனப்பகுதியில் சிக்கிய சிறுவன்... 2 நாட்களாக பாதுகாத்த கரடி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வனப்பகுதியில் சிக்கிய சிறுவன்... 2 நாட்களாக பாதுகாத்த கரடி

அமெரிக்கா: வனப்பகுதியில் சிக்கிய சிறுவனை ஒரு கரடி 2 நாட்களாக பாதுகாத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 










அமெரிக்காவின் வட கரோலினா கிராவன் கவுண்டியில் எர்னல் நகரை சேர்ந்த 3 வயது சிறுவன் தனது பாட்டி கேஸே ஹாதாவ் வீட்டிற்கு சென்றிருந்தான். காட்டுப் பகுதியில் உள்ள அந்த வீட்டருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த கேஸே காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டான். 



குழந்தையை காணாமல் பெற்றோர் தவித்தனர். அங்குள்ள வனப் பகுதியில் கருப்பு கரடிகள் அதிகமாக உள்ளன. இதையடுத்து 2 நாட்களாக போலீசார், வனத்துறையினர் ஹெலிகாப்டர், பறக்கும் கேமரா உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. 



மேலும் காட்டுப் பகுதியில் 3 டிகிரி அளவு குளிர் இருக்கும் என்பதால் பெற்றோர் பதட்டமடைந்தனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் ஒரு பெண் டிரெக்கிங் சென்றார். அப்போது சிறுவனின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த இடத்துக்குச் சென்றபோது அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது அந்த பெண்ணுக்கு. 



 ஒரு பெரிய கருப்புக்கரடி சிறுவனை அரவணைத்தவாறு இருந்தது. பெண்ணை பார்த்ததும் சிறுவனை விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றது. இதையடுத்து சிறுவனை அழைத்து வந்து போலீஸில் அப்பெண் ஒப்படைத்தார். இதுகுறித்து கிராவன் கவுண்டி போலீஸ் அதிகாரி சிப் ஹக்ஸ் கூறுகையில், "வனப் பகுதிக்குள் சிக்கிய சிறுவனை 2 நாட்களாக ஒரு கரடி பாதுகாத்துள்ளது. இது வியப்பாக இருக்கிறது என்றார். 




🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment