`3,373 பேர் சேர்ந்து உருவாக்கிய ரீ-சைக்கிள் லோகோ!' - சென்னை சிப்பெட் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`3,373 பேர் சேர்ந்து உருவாக்கிய ரீ-சைக்கிள் லோகோ!' - சென்னை சிப்பெட் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை

சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிப்பெட் கல்வி நிறுவனம், சமீபத்தில் தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடியது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றது. 






இதன் ஒரு பகுதியாக, ஜனவரி 23-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழிவு மேலாண்மைகுறித்த விழிப்பு உணர்வுக்காக உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டது. இதில், சிப்பெட் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 3,373 பேர் கலந்துகொண்டனர். மறுசுழற்சிக்கான அடையாளச் சின்னத்தை வரைந்து, அதனுள் மனிதர்கள் சென்று, அதை விட்டு எங்கும் அகலாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நின்று, பிறகு கலைந்துசெல்வதே சாதனையாகும். 




 சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 1,726 பேரை வைத்து செய்தது சாதனையாக இருந்தது. சிப்பெட், அந்தப் பழைய சாதனையை முறியடித்து, புதிய சாதனையைச் செய்துள்ளது. அன்றே ஆசிய சாதனைக்கான சான்றிதழைப் பெற்றாலும், கின்னஸ் பெற ஒரு வார காலமானது. தீவிர பரிசீலனைக்குப்பின், சிப்பெட் கின்னஸ் பெறுவதற்கான தகுதியைப் பெற்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. குப்பைகள் அச்சுறுத்தலாக உள்ள இப்பூமியில், மறுசுழற்சியின் பங்கு அவசியமாகிறது. 




இதைக் கருத்தில்கொண்டு இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment