கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் : தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் : தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு








மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில், 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், 7,200 பேர், விண்ணப்பித்திருந்தனர்.அவர்களில், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, நேர்காணலில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.இந்நிலையில், இதற்கான நேர்காணல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.





இது குறித்து, மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் கூறியதாவது:கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள், நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. நேர்காணலில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்கள் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.ஆனால், கால்நடைத்துறை இயக்குனரக உத்தரவின்பேரில், வரும் 22 முதல், 28ம் தேதி வரை நடத்தப்பட இருந்த நேர்காணல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 



அதற்கான தேதி பின், அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸

No comments:

Post a Comment

Please Comment