சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர வேண்டும் : கல்லூரிக் கல்வி இயக்ககம்
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு விண்ணப்ப படிவத்தை விநியோகிக்க வேண்டும் என்றும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து 10 நாட்கள் கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றும் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது

No comments:
Post a Comment
Please Comment