'நிலவில் நீர் இருந்தா முதல்ல எங்ககிட்ட சொல்லுங்க' - இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வித்தியாசமான ட்வீட்
நிலவிற்கு சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிக்கரமாக செலுத்திய இஸ்ரோவிற்கு சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் ட்விட்டரில் வித்தியாசமாக பாராட்டு தெரிவித்து உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்கபகல் 2.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தண்ணீர், கனிம வளங்கள் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது. சந்திராயன்-2 வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இஸ்ரோவிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் வித்தியசமான பாராட்டை இஸ்ரோவிற்கு தெரிவித்துள்ளது.
"சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். எங்கள் நகரத்திற்கு தேவையான புதிய நீர்வளத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளோம்.
ஒரு வேளை நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் நீங்கள் யாருக்கு சொல்ல வேண்டுமென்பது உங்களுக்கு தெரியும் 😉" என்று சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment