பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்று வினியோகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்று வினியோகம்

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்று வினியோகம் 





பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோருக்கு அசல் மதிப்பெண் சான்று வினியோகம்

கடந்த மார்ச் மாதம் நடந்த மேனிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் மாதங்களில் நடந்தது. அதில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த மாதம் 10ம் தேதி முதல் இணைய தளம் மூலம் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 




தற்ேபாது பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு பிறகு மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு பிறகு தங்கள் மதிப்பெண் சான்றுகளை 21ம் தேதி முதல் அவர்கள் தேர்வு எ ழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய நடமுறையில்(1200 மதிப்பெண்கள்), நிரந்தர பதிவெண் மூலம் தேர்வு எழுதியோர், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வில் எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால் அவர்களுக்கு ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றுகளும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும். 




புதிய நடைமுறையின்படி தேர்வு எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் பிளஸ் 1(600 மதிப்பெண்கள்) பிளஸ் 2( 600 மதிப்பெண்கள்) தனித்தனியாக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி அடையாத தேர்வர்களுக்கு அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு ெசய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இந்த வகை மாணவர்கள் மேற்கண்ட இரண்டு வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகே அவர்களுக்கு தனித் தனி மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment