எல்.எல்.பி., ஹானர்ஸ் கவுன்சிலிங்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, சீர்மிகு சட்ட கல்லுாரியில், மூன்றாண்டு, எல்.எல்.பி., மற்றும் ஒருங்கிணைந்த, ஐந்தாண்டு, எல்.எல்.பி., படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஐந்தாண்டு படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஏற்கனவே முடிந்து விட்டது.இதையடுத்து, மூன்றாண்டுக்கான, எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான, &'ஆன்லைன்&' விண்ணப்ப பதிவு, ஜூலையில் முடிந்தது. விண்ணப்ப பரிசீலனைக்கு பின், &'கட் - ஆப்&' மற்றும் தரவரிசை பட்டியலை, அம்பேத்கர் சட்ட பல்கலை, ஒரு வாரத்துக்கு முன் வெளியிட்டது.தேர்வு செய்யப்பட்ட, கட் - ஆப் மதிப்பெண் உள்ளவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்த கவுன்சிலிங், இரண்டு நாட்கள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment