கல்வி செய்திகள் 21/10/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வி செய்திகள் 21/10/2019

👩🏻‍🏫Today's  KALVINEWS👨‍🏫


2050 ஐப்பசி 4 ♝ &   21•10•2019


🛡கனமழை காரணமாக இன்று   கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 


🛡தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க தாமதம்,  ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு ரூ.20000/- அபராதம் மாநில தகவல் ஆணையர் உத்தரவு


🛡தமிழகத்தில் சமீபகாலத்தில் அரசு பணி ஆசையின் காரணமாக மோசடி பேர்வழிகளிடம் லட்சக்கணக்கான பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன - நாளிதழ் செய்தி 


🛡அரசுப்பணிக்கான தேர்வில் தேர்வு வைக்காமல் மதிப்பெண்களை மட்டுமே வைத்து வேலைவாய்ப்பில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அசத்தி வருகிறார். 


🛡சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்று தங்க பதக்கம் வென்று தமிழகத்துக்கு மற்றுமொரு மணிமகுடம் சூடியிருக்கிறார் திண்டுக்கல்  ஒட்டன்சத்திரம் மாணவி பிரதீபா.


🛡மருத்துவப் படிப்பில் மேலும் ஒரு மோசடி : 41 மாணவர்கள் கூட்டாக தேர்வில் காப்பியடித்தது அம்பலம் ; 2 மருத்துவ கல்லூரிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து


🛡DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு :  வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் இணைத்து  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு.


🛡PG TRB 2019 - தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு.


🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு : தீபாவளி முடிந்து நடைபெறும் - நாளிதழ் செய்தி.



🛡அனைத்து பள்ளிகளிலும் நெகிழி மற்றும் மின்னணு ஆகிய குப்பைகளை தனித்தனியாக போடுவதற்கு இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வலியுறுத்தலினால் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment

Please Comment