5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து

5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாரத்தான்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத்து
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்காலத்தில் பெண்களுக்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வு சலுகை அளிப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும். 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவானது 75 சதவீதம் இருக்க வேண்டும். எனவே தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவேட்டையும் அரசு கண்காணிக்கும். அரசு சார்பில் நீட் தேர்வு பயிற்சி தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment