மத்திய அரசு ஆதார் நம்பருடன் PAN நம்பரை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. ஏற்கனவே 18 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. மார்ச் 31 தேதிக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் தாக்குதலின் போது ஆன்லைனிலேயே உடனடியாக PAN எண் பெறும் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ஆன்லைனில் PAN எண் பெறும் முறை:-
வருமான வரித்துறை இணைய தளத்திற்குச் சென்று ஆதார் நம்பரை பதிவிட வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பி வைக்கப்படும். இந்த எண்ணை வலை தளத்தில் பதிவிட E-PAN எண் உடனடியாக கொடுக்கப்படும் . இந்த எண்ணை பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment
Please Comment