தீயணைப்பு வாகனங்கள் ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தீயணைப்பு வாகனங்கள் ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

*🌹💫தீயணைப்பு வாகனங்கள் ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?🌹
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

தீ விபத்து ஏற்பட்டாலோ ஆபத்து காலங்களிலோ நமக்கு உதவ வருவது தீயணைப்பு வீரர்கள் தான். ரோட்டில் தீயனைப்பு வாகனம் செல்லும் போது எல்லோரும் என்ன நடந்தது என்று பதற்றப்படுவர்.

இப்படியா மக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் இந்த தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் மட்டும் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது தெரியுமா? மேலும் இந்த நிறம் தான் எல்லா நாடுகளிலும் இருக்கிறதா? 

தீயனணப்பு வாகனங்களுக்கு பல ஆண்டு வரலாறு உள்ளது. முதன் முதலில் தயார் செய்யப்பட்ட தீயனணப்பு வாகனம் சிவப்பு நிறத்தில் இருந்ததால் அதே நிறமே தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
1900மாவது ஆண்டு ஹென்றி போர்டு என்பவர் தீயனைப்பு வாகனத்தை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்ய பரிந்துரைத்தார் அதற்க பெயிண்டிற்கான செலவும் குறைவாக இருந்தது.

ஆனால் சில நாடுகள் இந்த வாகனத்தை மிக அதிகமாக பராமரிக்கும் பொருட்டு உயர்ந்த விலை பெயிண்ட்டையே பயன்படுத்தினர். அந்த காலகட்டத்தில் சிவப்பு நில பெயிண்ட் தான் உயர்ந்த விலையிலும் இருந்தது.

வரலாறு எப்படியோ ஆனால் அது அறிவியல் பூர்வமாகவும் பல இடங்களில் ஒத்துப்போகிறது. இதனால் பல நாடுகளில் சிவப்பு .நிறத்திலேயே தீயனணப்பு வாகனங்களில் பெயிண்ட் செய்துள்ளனர்.

2004ம் ஆண்டு ஜேம்ஸ் டி வெல்ஸ் என்பவர் புளோரிடா ஹைவே பேட்ரோலுக்காக நடத்திய ஆய்வில் சிவப்பு மற்றும் நீல நிறம் தான் மக்கள் கண்களுக்கு எளிதாக தெரியும் என தெரிவித்திருந்தார். ஆனால் சிவப்பு நிறம் பகல் நேரத்தில் தான் தெளிவாக தெரியும் இரவு நேரங்களில் மங்களாகிவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

1965ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கல்லூரியில் நடந்த ஆய்வில் எலுமிச்சை கலர் அல்லது அடர் மஞ்சள் கலர் தான் இரவு நேரம் உட்பட எல்லா நேரங்களிலும் தெளிவாக தெரியும் என அறிவித்திருந்தார்.
ஆமெரிக்காவில் ஒவ்வொரு மாகணங்களிலும் ஒவ்வொரு கலரில் தீயனணப்பு வாகனங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. அதன் படி நியூயார்க்கை சேர்ந்த ஸ்டீபன் சாலமன் என்பவர் நடத்திய ஆய்வில் சிவப்பு நிறம் மிக குறைந்த அளவிலேயே மக்களின் கவனத்தை ஈர்க்கிறது

ஆனால் கலருக்கான மக்களிடம் உள்ள எண்ணம் நாட்டிற்கு நாடு மாறுபடுவதால் இந்த மாறுபட்ட பார்வையை ஒவ்வொருவரும் முன்வைக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை சிவப்பு எச்சரிக்கையின் நிறமாக மக்கள் மனதில் இருப்பதால் சிவப்பு நிறமே இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment