பெரும்பாலான கட்டிடங்களின் நுழை வாயிலில் சுழலும் கண்ணாடி கதவு போடப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெரும்பாலான கட்டிடங்களின் நுழை வாயிலில் சுழலும் கண்ணாடி கதவு போடப்படுகிறது. இதற்கு காரணம் என்ன?

பெரும்பாலான கட்டிடங்களின் நுழை வாயிலில் சுழலும் கண்ணாடி கதவு போடப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? 




பொதுவாக குளிர்காலத்தில் பெரிய கட்டடங்களில் குளிர்காலத்தில் அறையின் வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ள சுழலும் கண்ணாடி கதவு பயன்படுத்தப்படுகிறது. வெப்ப காற்று லேசாகவும், குளிர்காற்று கனமாகவும் இருக்கும். சாதாரண கதவை திறந்து மூடும்போது தரை மட்டத்தில் குளிர்காற்று வேகமாக அறைக்குள் செல்கிறது. 



 இதனால் அறையின் வெப்பம் குறைகிறது. வெப்ப நிலையை சமபடுத்த "ஹீட்டர்' துரிதமாக செயல்பட வேண்டியுள்ளது. சுழலும் கதவு என்றால் குளிர்காற்று வேகமாக உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. நம்மூரில் "ஏசி' அறையில் இதுபோன்று பயன்படுத்தப் படுகிறது. 


 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment