ஊரடங்குக்குப் பின்
அடுத்த கல்வி ஆண்டில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
மாநில கல்வித்துறையுடன், மத்திய மந்திரி ஆலோசனை
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மாதம்(மார்ச்) 3-வது வாரத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் ஊரடங்குக்கு பின் அடுத்த கல்வி ஆண்டில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை மந்திரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ஊரடங்குக்கு பின், கல்வி நிலையங்களில் என்னென்ன செய்ய வேண்டும்? மாணவர்களுக்கு எந்த மாதிரியான விழிப்புணர்வு செய்ய வேண்டும்? விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்வி கட்டணம் வசூலிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment