பணி நீட்டிப்பு ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு சலுகை இல்லை 50-க்கும்
மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் தள்ளுபடி
பணியில் இருந்து முறையாக
ஓய்வுபெற்ற பிறகு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் ஆசிரியர்களுக்கு
பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அவர்களுக்கு அரசு ஊழியர் களுக்கான ஓய்வு வயதை
உயர்த்திய தமிழக அரசின் அரசாணை பொருந்தாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வயதாக ஆக
உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை தங்களுக்கும் வழங்கக் கோரி கடந்த பிப்ரவரி,
மார்ச், ஏப்ரலில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்றக்
கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி
ஜெ.நிஷாபானு, மனுதாரர்களை பணியில் இருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து
உத்தரவிட்டார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் ,
மனுதாரர்கள் பணியில் இருந்து முறையாக ஓய்வு பெற்றுள்ளனர்.
கல்வி ஆண்டின் மத்தியில்
ஓய்வு பெற்றதால் மாணவர்களின் நலன் கருதி ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு கல்வி
ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓய்வு வயது உயர்வு
அரசாணை பொருந்தாது. அவர்களது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
Please Comment