கருமை மறைந்து: உதடுகள் சிவப்பழகு பெற...? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கருமை மறைந்து: உதடுகள் சிவப்பழகு பெற...?

கருமை மறைந்து: உதடுகள் சிவப்பழகு பெற...? 

 உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. எச்சிலில் இருக்கும் பாக்டீரியா உதட்டில் புண்களை ஏற்படுத்தும். மற்றும் உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் மறைந்து வெடிப்பு உருவாகும். உதடு பாதிப்பு அடைய மற்றுமொரு காரணம் மேக்கப். எனவே உறங்கச் செல்லுவதற்கு முன்பு உதடுகளில் சுத்தம் செய்வது அவசியம். எலுமிச்சை பழத்தை நறுக்கி அதனைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன. 

ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும். மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும். 

கொத்துமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும். நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். பீட்ரூட்சாறு உதடுகளில் உள்ள கருமையை விரைவில் மறைத்து விடும். ஜாதிக்காயை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment