குழந்தைகள் குதூகலம் :பெற்றோருக்கு அறிவுரை
அவிநாசி:
கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளி குழந்தைகள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள், பெரும்பாலும் அங்குள்ள அரசு பள்ளிகளில் பயில்கின்றனர். அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பில்லாததால், மாலை நேரங்களில் பூங்காக்களில் விளையாடுகின்றனர்.
சுகாதாரத் துறையினர் கூறுகையில், 'குழந்தைகளின் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் உட்பட அறிகுறி தென்படும் பட்சத்தில், அவர்களை வீடுகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொது வெளியில் விளையாட செல்லும் போது முக கவசம் அணிவித்தும், சமூக இடைவெளி பின்பற்றி விளையாடுமாறு அறிவுறுத்துவதும் அவசியம்,' என்றனர்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment