School Morning Prayer Activities - Today 04.07.2018 ( Daily Updates... ) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

School Morning Prayer Activities - Today 04.07.2018 ( Daily Updates... )


School Morning Prayer Activities - Today 04.07.2018 ( Daily Updates... ) 






பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் :



தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

உரை:



தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

பழமொழி :

Anger is sworn enemy


தீராகோபம் போராய் முடியும் 

பொன்மொழி:
தன்னிடத்தில் படித்த மாணவர்கள் உயருவதிலேதான் ஆசிரியர் தொழிலின் சிறப்பு மேலிடுகிறது ஆசிரியர்கள் பணி கைம்மாறு கருதாத தியாக பணியாகும்  -பேரறிஞர் அண்ணா 

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


சுய மரியாதை இயக்கத்தை தொடங்கியவர் 
ஈவெரா பெரியார்

அருணா அசாப் அலி எதனோடு தொடர்புடையவர் 
வெள்ளையனே வெளியேறு இயக்கம்

நீதிக்கதை :


நாய்க்குட்டி சொன்ன நீதி
————————————————–
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.
என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.
அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.
இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி
எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.
உண்மைதான்! என்றது நாய்க் குட்டி




பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.
ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.
இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?
குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.
ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி
அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.
திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.
நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.
இன்றைய செய்தி துளிகள் : 












1 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள்

2. உப்பு தண்ணீரில் ஓடும் டூ வீலர் - அரசு பள்ளி மாணவி சாதனை

3. மாநில பாட திட்டத்தில் மாணவர்களுக்கு 70 சதவீதம் மருத்துவத்தில் ஒதுக்கீடு

4. உலக கோப்பை கால்பந்து : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது ஸ்வீடன்




No comments:

Post a Comment

Please Comment