ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்...அரசாணை வெளியானது!
தமிழகத்தில் ஆசிரியர் பணிநியமனத்தில் தகுதித் தேர்வு, நியமனத்துக்கான தேர்வு என தனித்தனியாக இரண்டு தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதில் வெயிட்டேஜ் முறை விரைவில் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். அதாவது, தற்போது தகுதி தேர்வு மதிப்பெண்ணுடன், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண்களும் சேர்த்து வெயிட்டேஜ்t முறையில் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு தனியாகவும், நியமனத்துக்கான தேர்வு தனியாகவும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக அரசு இதற்கான அரசாணையைt இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போட்டித் தேர்வுக்கு செல்லலாம். போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
Click here to download
Click here to download
No comments:
Post a Comment
Please Comment