நெட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்பட்டது
தேர்வில், 8.59 லட்சம் பேர் பங்கேற்றனர்.இதன் முடிவுகளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது
இந்த தேர்வில், உதவி பேராசிரியர் பணி தகுதிக்கு, 52 ஆயிரம் பேரும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், ஜே.ஆர்.எப்., ஆராய்ச்சி மாணவர் உதவி தொகை பெறும் தகுதிக்கு, 3,900 பேரும் தகுதி பெற்றுள்ளனர்
No comments:
Post a Comment
Please Comment