இன்று கட்டட பொிறயாளர் தினம்: விஷ்வேஸ்வரய்யாவுக்கு கூகுள் கவுரம்
ஆண்டு தோறும் செப்டம்பர் 15-ம் தேதி .விஷ்வேஸ்வரய்யா பிறந்த நாளையொட்டி கட்டட பொறியாளர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரை கவுரவிக்கும்விதமாக தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனம் டுடூல் மூலம் சிறப்பித்துள்ளது.இந்தியாவின் முன்னோடி பொறியாளரான விஷ்வேஸ்வரய்யா பிரிட்டீஸ் ஆட்சியில் பொதுப்பணித் துறையில் பணியாற்றியவர்.
அணைக்கட்டுத் தொழில்நுட்பத்தின் விற்பன்னரான இவர் தானியங்கி மதகு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அது இது மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு அணைக்கட்டுகளின் பின்னால் இவரது உழைப்பு உள்ளது.கூகுள் நிறுவனம் தன்னுடைய டுடூல் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் அன்றைய சிறப்பை குறிக்கும் வகையில் டுடூலை வடிவமைப்பது வழக்கம் .அதுபோல் கட்டட கலை பொறியாளரான விஷ்வேஸ்வரய்யாவை தனது டுடூல் மூலம் கவுரவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment