அக்டோபர் 1 முதல் நோபல் பரிசு அறிவிப்பு: இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்து ஆண்டு வழங்கப்படும் என அறிவிப்பு
உலக அளவிலான அங்கீகாரமாக கருதப்படும் நோபல் பரிசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படவுள்ளது.
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.
வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும்.
பொருளியலுக்கான நோபல் பரிசு 1968- ல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
Please Comment