உடற்சூட்டை தணிக்கும் வருண முத்திரையின் செய்முறை..!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உடற்சூட்டை தணிக்கும் வருண முத்திரையின் செய்முறை..!!

உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளுக்கு இந்த முத்திரையை செய்யலாம்.





செய்முறை : விரிப்பில் அமர்ந்து பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள். சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.







அமரும் முறை: பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம். ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம். கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.






எவ்வளவு நேரம் : குறைந்தபட்சம் 24 நிமிடங்கள். காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம். உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம். ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும். காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள். 





பலன்கள் :



1. உடற்சூடு தணியும்
2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
3. வியர்வையால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
4.சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
5. தோல் வறட்சி நீங்கி, தோல் மினுமினுப்பாகும்.
6. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
7. இளமையான தோற்றம் உருவாகும்.
8. தாகம் தணியும்.
9. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்

No comments:

Post a Comment

Please Comment