நர்சரி பள்ளிகளாகும் அங்கன்வாடி மையங்கள் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நர்சரி பள்ளிகளாகும் அங்கன்வாடி மையங்கள் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த


தமிழகத்தில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாறுகின்றன.தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு டேப்லெட் என அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வளாகத்தில் பயிலும் வகையில் மாதிரி பள்ளிகளும் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதேபோல் அங்கன்வாடி பணியாளர்களின் கல்வித்தரத்தை முன்வைத்து சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படும்.






இதன் மூலம் அங்கன்வாடி மையங்களில் 2ல் இருந்து 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிரீகேஜி பாடங்களும், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எல்கேஜி பாடங்களும், 4ல் இருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு யுகேஜி பாடங்களும் கற்பிக்கப்படும். இதற்கான பாடத்திட்டங்களும் தனியாக தயாரிக்கப்படும். அந்த வகையில் 1ம் வகுப்புக்கு வரும் குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து எழுத்துக்களையும் அறிந்த நிலையில் வருவர். அதேபோல் எண்களையும் அறிந்திருப்பர்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசு பள்ளிகளை கொண்டு வரும் நோக்கிலும், தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்தவும் அரசின் தொடக்கக்கல்வித்துறை மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அங்கன்வாடி மையங்கள், அவற்றில் பராமரிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை, வயது விவரம் ஆகிய அனைத்து நிலைகளிலும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.

No comments:

Post a Comment

Please Comment