அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்., மாணவ மாணவியர்கள்.!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்., மாணவ மாணவியர்கள்.!!




தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து மாவட்ட மக்களும்., தமிழ்க்கடவுள் முருகனின் பக்தர்களும் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.








மேலும் சூரசம்ஹாரத்தினைக்கான மாவட்ட மக்கள் அனைவரும் நவம்பர் 13 ம் தேதியன்று வருகை தந்த வண்ணம் இருப்பார்கள். இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 13 ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப்தந்தூரி அவர்கள் உத்தரவிட்டார்.


Please click here to download > 4th Standard Learning Outcomes (pdf)







இந்த உள்ளூர் விடுமுறையானது அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும்., அங்கு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் பொருந்தாது என்று அறிவித்துள்ளார். மேலும் அவசர தேவைகளுக்கான பொது அலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் மட்டும் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தார்.





மேலும் இந்த விடுமுறை தினமானது அரசாங்கத்தின் பொது விடுமுறை இல்லை என்பதால்., இதற்க்காக டிசம்பர் 8 ம் தேதியான இரண்டாம் சனிக்கிழமையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளார்.

News Source >தூத்துக்குடி மாவட்டத்துக்கு 13-ந்தேதி விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

No comments:

Post a Comment

Please Comment