விருதுநகர் அருங்காட்சியகத்தில் வரும் 14 ஆம் தேதி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற உள்ளது.
இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் வியாழக்கிழமை கூறியதாவது:
விருதுநகர் அரசு அருங்காட்சியகமும், சுழற் சங்கமும் இணைந்து நவ.14 அன்று குழந்தைகள் தின விழா கொண்டாட முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை 10 மணி முதல் 11.30 மணி வரை ஓவிய போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தேசிய மலர் தாமரை என்ற தலைப்பிலும், நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை பசுமை வீடு என்ற தலைப்பிலும், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேசிய தலைவர் என்ற தலைப்பிலும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தூய்மை இந்தியா என்ற தலைப்பிலும் ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் நவ. 10 -க்குள் அருங்காட்சியகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஓவியம் வரைவதற்கான அட்டை அருங்காட்சியகத்தில் வழங்கப் படும். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு அன்றைய தினமே பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை பள்ளி மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும் நடைபெற உள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment
Please Comment