வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் சென்னை கிண்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் (பத்திரிகை செய்தி) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் சென்னை கிண்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் (பத்திரிகை செய்தி)

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சென்னை கிண்டியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப் படுகிறது. இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொண்டு பயன் பெறலாம்.



இதுதொடர்பாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்களிலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையானது ‘வேலை வாய்ப்பு வெள்ளி’யாக அனுசரிக் கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை மூலம் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படு கின்றன. இதன்மூலம் ஒவ் வொரு வாரமும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலு வலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (9-ம் தேதி) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பை முகாமை நடத்த உள்ளன.



இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் (கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இதில், 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளோமா, கலை அறிவியல் பட்டப் படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளி கள் உள்பட) கலந்துகொள்ளலாம். வயது 35-க்குள் இருக்க வேண் டும். இந்த முகாமில், 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு பணியாளர் களைத் தேர்வுசெய்ய உள்ளன. எனவே, படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப் படும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள் ளார்.

No comments:

Post a Comment

Please Comment