தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சென்னை கிண்டியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப் படுகிறது. இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இதுதொடர்பாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்களிலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையானது ‘வேலை வாய்ப்பு வெள்ளி’யாக அனுசரிக் கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை மூலம் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படு கின்றன. இதன்மூலம் ஒவ் வொரு வாரமும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலு வலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (9-ம் தேதி) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பை முகாமை நடத்த உள்ளன.
No comments:
Post a Comment
Please Comment